நமது பாலர்மலர் பள்ளியிலிருந்து HSC தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் இருவரும் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து நமக்கு பெருமை தேடித்தந்துள்ளனர் என்பதை மிகுந்த பகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
செல்வி அதித்ரி அனகன் – பாலர் மலர் – மிண்டோ
செல்வி ஸ்ரீஷைலா ஜெயகுமார் – பாலர் மலர் – குவாக்கர்ஸ் ஹில்ஸ்
இவ்விருவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த இந்த வெற்றி அடுத்து வரும் மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இருவருமே தங்களது பாலர்மலர் கிளைகளின் முதல் HSC தமிழ் மாணவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்நேரத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாலர் மலர் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
Congratulations Adhitri and Shreeshaila for your achievements. As the first students to complete the Tamil HSC exam from our respective Balar Malar Branches, your hardwork and determination is inspiring to our future students. These achievements are also a testimonial to the support of our dedicated teachers, and of the parents who have been vital in these students’ journey.